games

img

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியா முதலிடம்

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்ததுள்ளது. 

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்தது. இந்த தொடரில் 60 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் நேற்று நடந்த 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான்- அனிஷ் பன்வாலா ஜோடி 17-7 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது. அதேபோல் ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இறுதிப்போட்டியில் அனிஷ் பன்வாலா, குர்பிரீத் சிங், பாவேஷ் ஷெகாவத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 7-17 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மன் அணியிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது.

இந்த உலகக்கோப்பை தொடரில் ஒட்டுமொத்தமாக இந்திய அணி 4 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. நார்வே 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என இராண்டாம் இடத்திலும், பிரான்ஸ் 3 தங்கம் உள்ளிட்ட 20 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

 

;